குழந்தை
வளர்ப்பின் அழகான தருணங்களை காட்சிப்படுத்தியிருக்கிறார் விழியன் உச்சிமுகர் புத்தகத்தின்
மூலம். அப்பாவுக்கும் குட்டி மகளுக்கும் நடக்கும் சுவரஸ்யமான உரையாடல்களின் தொகுப்பு..
தேவதை
வளரும் வீடுகளில் அதை வளர்த்தெடுக்க கவிதை மனம் கொண்ட நல்ல பெற்றோர்கள் தேவை. அப்படி
நம்மை மாற்றிக்கொள்ள சின்ன சின்ன வழிகாட்டுதல்கள்..
பந்தயமாகிவிட்ட
வாழ்க்கை சூழலில் நாம் இழந்தது எதை என்பதை ஒவ்வொரு பக்கத்திலும் உணர முடிகிறது.
படித்து
முடித்ததும் உங்கள் குழந்தைகளோடு பேச இல்லை இல்லை உங்கள் குழந்தைகளை பேச வைத்து கேட்க
மனம் பரபரக்கும் என்பதுதான் இந்தப்புத்தகத்தின் சாதனை.
நம்மிடம்
குழந்தைகள் எதிர்பார்ப்பது சற்றே பெரிய காதுகளை என்கிறார். உண்மைதான் கூடவே கொஞ்சம்
பொறுமை கொண்ட இதயமும்.. .. . .
குழந்தைகள்
பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்றால் நீங்கள் இரண்டு மூன்று முறை
பூஸ்ட் குடித்து உற்சாகமாக இருக்க வேண்டும் இல்லை இதயம் அந்த அளவிற்கு கனிந்திருக்க
வேண்டும். விழியனுக்கு கனிந்திருக்கிறது.
விளையாட்டுத்தோழர்கள் பொம்மைகள் பென்சில்கள் பேனாக்கள் என குழந்தைகளின்
நட்பு உலகம் பெரியது. அதில் நுழைய வேண்டும் என்று ஆசைப்பட்டால் உங்கள் செருப்பையும்
அறிவையும் கழட்டி வைத்துவிட்டு நுழைய வேண்டும்.
உச்சிமுகர்
படித்ததும் எனக்கு வந்த குழப்பம் யாரை உச்சி முகர்வது குழலியையா? இல்லை விழியனையா?
குழலிக்கும்,
விழியனின் பேனாவிற்கும் யாராவது திருஷ்டி சுத்திப்போட்டால் தேவலை.
இதை
படித்து முடிக்கும்போது தோன்று உங்கள் வீட்டில் நடந்த குழந்தை கதைகளை தயவுசெய்து நண்பர்
விழியனிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லா குயில்களின் குரலும் பதிவாகட்டும்.
விழியன்
தயவு செய்து உங்கள் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள். இனியன் என்று.
புத்தகத்திலிந்து
ஒரு ஸாம்பிள் :
// A-Z இரண்டு முறை எழுத வேண்டும் எனக் குழலிக்கு வீட்டு வேலை (Home
Work). இரண்டாவது முறை O வரும்போது தான் எனக்கு அதனை கூறினாள்.
“அப்ப இந்த Oவும், Qவும் friends பா” என அதற்கு
இருக்கு ஒற்றுமையை கூறினாள். பின்னர் P,B,R மூன்று அக்கா
தங்கைகள் என்றாள். களத்தில் நான்
குதித்து M – W என்ன என
கேட்டேன். ‘எனிமீஸ்’ என்றாள். N – Z என்ன பக்கத்துவீட்டுக்காரர்களா என்றேன். T, J, I இவங்க அண்ணன்
தம்பிங்க என்றாள். எவ்வளவு சுவாரஸ்யமா சம்பந்தப்படுத்திக்கிறாங்க குழந்தைகள்.
‘யாரு குழலி உனக்கு
இதைச் சொல்லி தந்தது’
என கேட்டேன்.
‘அதான்பா புது ப்ரண்டு, குளிச்சிட்டே இருப்பாளே டூடூ’ (டூடூ அந்த சமயத்தில் இருந்து ஒரு கற்பனை கதாபாத்திரம்).
‘அதான்பா புது ப்ரண்டு, குளிச்சிட்டே இருப்பாளே டூடூ’ (டூடூ அந்த சமயத்தில் இருந்து ஒரு கற்பனை கதாபாத்திரம்).
பள்ளிக்குச் செல்லும் போது
எல்லாம் மறந்திடுங்க எல்லாமே பிரண்ட்ஸ் எனக்
கூறினாள். டூடூ ஏன்
இப்படி மாத்தி மாத்தி
சொல்லித்தரான்னு தெரியல. //
அருமையான நூல்
ReplyDeleteநன்றி நண்பரே
சுவாரஸ்யம்...!
ReplyDelete