நாடு
திரும்பா எழுத்தாளர் வரிசை என்ற அடிப்படையில் இந்த நூல் வெளியிடப்படுகிறது.
நாளை
வீடு திரும்பா எழுத்தாளர் வரிசை என்று கூட ஒரு தொகுப்பு வரலாம்.
"என்னையும்
சேர்த்துக்கொண்டு வாழ இந்த உலகம் இன்னும் பழகவில்லை" என்ற எழுத்தாளர்களின் குரலுக்கு
நாம் என்ன பதில் சொல்லப்போகிறோம்?
தலைப்பில்
தொடங்கி பக்கத்திற்கு பக்கம் ஒங்கி ஒலிக்கிறது கலகக்குரல். நம்மை கலகலக்க வைக்கும்
குரல். சான்றாக சில...
இந்நூல்
மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதை எப்படியாவது பெற்றுவிடும் நோக்கில் மொழி
பெயர்க்கப்பட்டதல்ல..
போர்
முடிந்து விட்டதாக சொல்வதும் கூட போரின் ஒரு பகுதிதான்.
பிறந்து
வளர்ந்த மண் காலில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. மனதிலோ உதிர்ந்து கொண்டிருக்கிறது.
பட்டாளத்துக்கு
புட்டு அவிப்பதைப்போல பதிப்பகங்களின் தேவைக்காக சில ‘இருமொழி இயந்திரங்கள்’ இயங்குவதை
நானறிவேன்.
தேசியத்தின்
பெயரால் அழிவுகள் நடக்கும்போது முடிந்த மட்டும் தேசத் துரோகியாக வாழ்வது அவசியம்
இப்படி
இன்னும் நிறைய இருக்கிறது.
மனிதக்காதலின் மகத்தான அடையாளமான தாஜ்மகால்
போல புத்தகக் காதலின் மகத்தான அடையாளமாக ஈஜின் நூலகத்தின் பின்புலத்தில் உள்ள நிலவறை
பற்றி படிப்பதற்காகவே இந்தப்புத்தகத்தை வாங்க வேண்டும் என நான் பரிந்துரைக்கிறேன்.
மொழி
பெயர்ப்பாளர் கருத்துபதிவில் இனி வரப்போகும் எதிர்வினைகளுக்கும் சேர்த்து ஆதவன் இலக்கியச்சண்டை
போட்டிருக்க வேண்டியதில்லை.
மீசை என்பது வெறும் மயிர்.
இன்னமும்
பெயரிடப்படாத நாடு ஒன்று உள்ளது.
உலகத்திலேயே
புகைப்பழக்கமும் தீயணைப்புத்துறையும் இல்லாத ஒரே நாடு இதுதான். ஏனெனில் அங்கே நெருப்பே
இல்லை.
ஏன்
என்கிற கேள்விக்கு பின்னால் உள்ள புனைவு அடுக்கடுக்காய் அதிர்ச்சியடைய வைக்கிறது.
நாவல் செய்ய வேண்டிய வேலையை இந்த நாவல் சுருக்கமே செய்து விடுகிறது.
மொழி
பெயர்ப்பாளர் குறிப்பில், குறிப்பிடுவது போல் ஏர்க்காலில் கண்டெடுத்த குலதெய்வத்தின்
சிலையைத் தூக்கி வருவதுபோல உற்சாகத்தோடு தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு வந்திருக்கிறார் , ஆதவன் தீட்சண்யா..
மொழி பெயர்ப்பு முயற்சிக்கு வாழ்த்துக்கள்
உங்கள்
நாவலுக்காக காத்திருக்கிறோம்.
மீசை என்பது வெறும் மயிர்
சந்திப்பு நேர்காணல் நாவல் சுருக்கம்.
ஆசிரியர்: ஆதவன் தீட்சண்யா
வெளியீடு: சந்தியா பதிப்பகம்.எண், 77, 53வது தெரு,9வது அவென்யூஅசோக்நகர் சென்னை - 83
பக்: 176, விலை: ரூ.130
தலைப்பின் குறிப்பு
மீசை என்பது வெறும் மயிர். தாடி என்பது அறிவின் நீட்சி
காரணம் நந்திஜோதி பீம்தாஸ் ஆதவன் தீட்சண்யா நான் என எல்லோரும் தாடி வைத்திருக்கிறோம்.
ஆஹா இந்த நூல் கண்டிப்பாக வேங்க வேண்டுமே.....
ReplyDeleteநன்றி
Deleteஆகா
ReplyDeleteஅவசியம் வாங்கிப் படிக்கின்றேன் நண்பரே
புதுமையான முறையில் புத்தகத்தை அறிமுகப்படுத்தும் புத்தகம்.
Deleteமிகவும் சுவாரஸ்யம்...
ReplyDeleteநூல் அறிமுகத்திற்கு நன்றி...
புத்தகம் சுவாரஸ்யமானது அதனால்தான் அறிமுகமும் அப்படி இருக்கிறது.நன்றி.
Delete