கதை விவாதத்தில் நானும் கலந்து கொள்கிறேன்.
கண்டிப்பாக அதில் பைக்கிலிருந்து பலூனுக்கு தாவுகிற அளவுக்க வலிந்து திணிக்கப்பட்ட நாயக அம்சங்கள் இருக்காது.
ரஜினியை நம்பாவிட்டாலும் ரஞ்சித்தை நம்பலாம்.
அரசியல் தளத்தில் உள்ள கதை என்று இப்போதே கதைகள் கிளம்பிவிட்டன. அப்பத்தானே எதிர்ப்புக்கு பஞ்சமிருக்காது.
விளம்பரச் செலவு அநேகமாக தயாரிப்பாளருக்கு மிச்சமாகிவிடும்.
அரசியல் கதை. அப்புறம் என்ன? தலைவர் தப்பு செய்கிறவர்களை தட்டிக்கேட்கப் போகிறார்.
நாமும் தவறை சரி செய்யும் வேலையை தலைவர் பார்த்துக்கொள்வார் என்று ஐநூறுக்கும் ஆயிரத்திற்கும் டிக்கெட் வாங்கி படம் பார்த்துவிட்டு நாம் செய்து கொண்டிருக்கிற நம் அளவிளான தவறுகளை தொடர ஆரம்பித்து விடுவோம்.
தான் அடைந்த உயர்வை பயன்படுத்தி இந்த சமூகத்தை உயர்த்தாத கலைஞன் யாராக இருந்தாலும் அவன் நிலைக்கப்போவதில்லை. காலத்தின் ஒட்டத்தில் அவன் காணமல் போய்விடுவான்.
இதை ரஜினியும் ரஞ்சித்தும் உணர்திருந்தால் கதை இப்படித்தான் இருக்கும் :
தவறுகளை தட்டிக்கேட்க மக்களை தயார் படுத்துகிறான் நாயகன். மக்களில் பெரும்பான்மையானவர்கள் தங்கள் அன்றாட வாழ்வை தாண்டி சிந்திக்க தெரியாதவர்கள் அதனால் நாயகனை மறுக்கிறார்கள். தனக்குள் இருக்கும் நாயகனை மறந்ததால் ஒரு நாயகனுக்காக காத்திருக்கிறார்கள்.
கதையின் நாயகன் ஒவ்வொருவருமே நாயகனாக மாற வேண்டிய அவசியத்ததை புரியவைக்கிறான். ஒரு நாயகனால் ஒன்றையும் மாற்ற முடியாது. ஒவ்வொருவனும் நாயகன் ஆனால் எல்லாவற்றையும் மாற்றலாம் என்று உணர்ந்த நாளில் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த களத்தில் இறங்குகிறார்கள். நாயகன் மக்களுக்குள் கரைந்து காணமல் போகிறான்.
கதை இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இது போல இருக்கட்டும்.
இந்த கட்டுரையை அன்புள்ள ரஞ்சித்திற்கு என்று ஆரம்பித்து மீண்டும் படித்துக்கொள்ளுங்கள்.
இதை ரஞ்சித்திற்கான என் மனம்திறந்த மடலாக இங்கே வைக்கிறேன்.
இதையெல்லாம் விட்டுவிட்டு, 'நாம் எதுவும் செய்யவேண்டியது இல்லை. நாயகன் நம்மை பார்த்துக்கொள்வார்' என்ற பழைய தனிமனித துதிப்பாடலையே பாடப்போகிறீர்கள் என்றால் தமிழ்சினிமாவும் அதன் ரசிகர்களும் நாசமாகப் போகட்டும் என்று இப்போழுதே வாழ்த்துகிறேன்.
பி.கு : கதை பற்றி இப்பொழுதே துவங்கும் இணைய விவாதத்தில் நானும் பங்கேற்கிறேன் என தெளிவாக புரிந்து கொள்ளவும்.
No comments:
Post a Comment